துபாயில் பெண்களுக்காக பெண் பயிற்சியாளரால் நடத்தப்பட்ட இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி 20.09.2013 அன்று மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா சலாஹூதீன் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் உள்ள யுனைடெட் டிரேடர்ஸ் கம்பெனி பில்டிங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை பொறியாளர் எம். ஷாமிலா சிறப்பான முறையில் நடத்தினார். பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆண்- பெண் புரிதல், அறிவியல், உளவியல் மற்றும் இஸ்லாமிய பார்வை, இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை உணருதல், ஆண்,பெண் மன, உடல் ரீதியான தன்மைகளைப் பொறுத்து அமையும் நம் கடமைகள், திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும் வழிமுறைகள், தன்னம்பிக்கையூட்டும் தகவல்கள் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெற்றன.
ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
Tuesday, 24 September 2013
துபாயில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி 'அகமும் புறமும்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment