Saturday, 8 September 2018

சிறப்பாக நடைபெற்ற புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கான சிறப்பு பயிற்சி முகாம்

தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி அமைப்பின் சார்பாக புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கான சிறப்பு பயிற்சி முகாம் விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் எம். ஹுஸைன்பாஷா அவர்களின் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டை பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரி வளாகத்தில் 08.09.2018 அன்று நடைப்பெற்றது.


விழி அமைப்பின் மாநில துணை செயலாளர் புதுமடம் ஹலீம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். தமுமுக மமக மாநில துணை தலைவர் பி.எஸ்.ஹமீது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பள்ளிகளைத் தொடங்குவதற்கான விதிமுறைகள் குறித்து தமிழக அரசின் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், விழி அமைப்பின் திருச்சி மாவட்டச் செயலாளருமான முஜம்மில்கான் அவர்கள் பயிற்சியளித்தார். பள்ளிகளில் நிதி மேலாண்மையை கையாளும் முறையைக் குறித்து விழி அமைப்பின் மாநில துணை செயலாளர் பொறியாளர் அப்துல் சமது அவர்கள் பயிற்சியளித்தார்.


இறுதியாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை உஸ்மான்கான் அவர்கள் நிகழ்ச்சியின் சாராம்சங்களை விளக்கி நிறைவுரை நிகழ்த்தினார்கள்.இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

விழாவிற்கான ஏற்பாட்டினை விழியின் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் காதர் பாஷா, விழியின் வடசென்னை மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத், சினர்ஜி இண்டர்நேஷனல் குழம அலுவலர் தமீமுல் அன்சாரி உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.









TESTIOMONIALS























































Friday, 7 September 2018

JCI சென்னை சிட்டி நடத்திய பயிற்சி முகாம்

JCI சென்னை சிட்டி சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் 07.09.2018 அன்று அம்பத்தூர் சோழபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் நடத்தப்பட்டது. JCI சென்னை சிட்டியின் தலைவர் Jc. P. ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் Jc. HGF. லேனா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.


மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் Jc. முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சியளித்தார். இலக்கை நிர்ணயித்தல், அர்ப்பணிப்புடன் படிப்பதற்கான வழிமுறைகள், வெற்றிக்கான அடிப்படை தத்துவங்கள் ஆகியவற்றைக் குறித்து சிறப்பான முறையில் பயிற்சியளித்தார். நடத்தப்பட்ட பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் Jc. சுப்ரமணி அவர்கள் நன்றியுரையாற்றினார்.











TESTIMONIALS