கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம் – விமர்சனம்...!
கடல் கடந்த பறவைகள் எனும் ஆவணப்படத்தை பார்த்தேன், கடலை கடக்கும் பறவைகள் எங்கும் நீண்ட நாட்கள் தங்குவதில்லை, அவை தங்கினாலும் தம் பயணத்தை நிறுத்துவதில்லை. ஆனால் பறவைகள் உடலில் கொழுப்பை சேமித்துக்கொண்டு பறக்கின்றன.
உலகையே வலம் வரும் ஷ்வாலோ பறவைகள் தம் வாயில் சிறு குச்சியை ஏந்திய வண்ணம் பறக்கின்றன. நெடும் பயணத்தில் குச்சியை கடலின் மேல் போட்டு ஓய்வெடுப்பதோடு உணவும் தேடிக்கொள்கின்றன. மனிதர்கள்தான் வெறும் கையை வீசிக்கொண்டு பறக்கிறார்கள். அவர்களிடம் சிறந்த கல்வி, ஈன்ற பயிற்சி இருப்பின் அவர்களும் கடல் பறவையைபோல் பயணிப்பர். ஷ்வாலோ பறவையைபோல் செயல்படுவர்.
வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் நமது சகோதரர்கள் நல்ல படிப்போடு சென்றால் நல்ல வேலைகளை பெறலாம். குடும்பத்தோடு வாழும் வசதிகளையும் பெறலாம். வயல்களை விற்று, நகைகளை விற்று கடன்பட்டு செல்பவர்கள் நல்லபடிப்பு இல்லாததால் மிக குறைந்த ஊதியம்பெற்று தனிமைப்பட்டு மனம் புழுங்கி வாழவேண்டிய நிலையில் உள்ளார்கள். எனவே நல்ல படிப்போடு தகுதிகளை வளர்த்துக்கொண்டு செல்வதை நற்பேற்றைத்தரும்.
வருங்காலத்தை வளமாக்கும் இந்த சிந்தனையை கடல் கடந்த பறவைகள் என்கிற ஆவணப்படம் எனக்கு தந்தது. படத்தில் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,பேரா.முனைவர் தமிழ்ச்செல்வன், கவிஞர் யுகபாரதி மூவரும் கடல் கடந்த தோழர்களின் துன்பங்களை நன்கு பதிவு செய்து தீர்வும் கூறியுள்ளனர். இதைப்போல் கடல் கடந்து வாழம் அருமை சகோதரர்களும் தம் நிலையை நன்கு பதிவு செய்துள்ளனர்.
உள்ளங்களை கசியவைக்கும் ஆவணப்படம் கடல் கடந்த பறவைகள். அருமை சகோதர்களின் அற்புத படபிடிப்பு...முயற்சி வெல்லட்டும்.
அன்புடன்,
தாழை மதியவன்
எழுத்தாளர்
Tuesday, 24 February 2015
கடல் கடந்த பறவைகள் - அ.அப்துல் வதூத்
'கடல் கடந்த பறவைகள்' – ஆவணப்பட விமர்சனம்
தூரக்கடலை கடந்து வந்த பறவைகள் துயரக்கடலில் தத்தளிப்பதை மிகுந்த வலியோடு சித்தரிக்கின்றது இந்த ' கடல் கடந்த பறவைகள் ' பதிமூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி வணிகத்துக்காக புலம்பெயர்ந்த தமிழர்களை மேலை நாட்டு ஆதிக்கச் சக்திகள் அடிமைபடுத்தும் அவல சம்பவத்திலிருந்து அதிர்வலைகளை கிளப்புகின்றது இந்த ஆவணப்படம்.
இளமையில் அதிகம் பொருள் ஈட்டினால் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழலாம் என்று ஆசையில் தூரதேசம் பயணப்பட்டவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் தாங்கள் இழந்த இளமையை பெறமுடியாது என்பதை வேதனையோடு உணர்த்துவதாய் படக்குழுவினர் காட்டியிருப்பது நிதர்சனம்!
'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்' என்று சொந்த நாட்டின் சுரம் பாடிவிட்டு எண்ணை வளம் உள்ள பல நாட்டின் பாலைவெயிலில் வெந்து தன் சிறகுகளை கருக்கிக்கொண்டதன் நெடி இந்தப்படம் முழுதும் நிறையவே அடிக்கின்றது.
கட்டிடத்தொழில்,தோட்டவேலை, அலுவலக உதவியாளர், தட்சர்பணி மற்றும் சாலைப்பணிகளில் தங்கள் உடலையும் உள்ளதையும் கடுமையாக வருத்திகொண்டு உழைக்கும் நம் தோழர்கள் கூறும் கண்ணீர் கதைகள் நம் சதைகளை குத்திக்கிழித்து இதயத்தை தொடுகின்றன.
இந்த ஆவணப்படத்தை காணும்போது அரபு தேசத்தில் கிடைக்கும் பெட்ரோலை விட இவர்கள் உழைத்து சிந்திய வியர்வைகளே அதிகம் என்று அனைவருக்கும் எண்ணத்தோன்றும்.
தாய்நாட்டில் தன் உறவுகள் யாரும் காண்ணீர் சிந்திவிடக்கூடாது என்பதற்காக இவர்கள் அயல் நாட்டில் இரத்தம் சிந்தவும் தயாரகிவிட்டதற்கான காரணங்களையும் காட்சிகளாக காட்டியிருக்கிறார்கள். வாழ்வியல் சூழலாலும் உளவியல் காரணங்களாலும் இவர்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டு தன் உறவுகளுக்காக இவர்கள் செய்யும் தியாகம் நியாயமாகவேபடுகின்றது.
இந்த ஆவணப்படம் இவர்களின் கண்ணீருக்கு கைக்குட்டை கொடுப்பதை தவிர்த்துவிட்டு கைகொடுத்து மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கு துணைநிற்கிறது.பெரும்பான்மையான வெளிநாடுகளில் 'தொழிலாளர் நலத் துறை' இருந்தாலும் அதன் பயன்பாடு இவர்களுக்கு முறையாக போய்சேருவதில் இருக்கும் வழிதடங்களை சீர்படுத்தி, தான் உழைக்கும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு முழுபலமாய் இருக்கும் இந்த தியாகத்தொழிலாளர்கள் வாழ்க்கை வளம்பெற அவர்கள் மனநிம்மதியோடு வாழ ஆவன செய்யட்டும் இந்த ஆவணப்படம்!
இதுபோன்று பேலும் பலமுற்சிகளை முனைப்புடன் முன்னேடுத்துச் செல்லும் ஸ்கைலைன் மீடியா படக்குழுவினரை மனம்திறந்து பாராட்டலாம்.
-அ.அப்துல் வதூத் துபாய்
தூரக்கடலை கடந்து வந்த பறவைகள் துயரக்கடலில் தத்தளிப்பதை மிகுந்த வலியோடு சித்தரிக்கின்றது இந்த ' கடல் கடந்த பறவைகள் ' பதிமூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி வணிகத்துக்காக புலம்பெயர்ந்த தமிழர்களை மேலை நாட்டு ஆதிக்கச் சக்திகள் அடிமைபடுத்தும் அவல சம்பவத்திலிருந்து அதிர்வலைகளை கிளப்புகின்றது இந்த ஆவணப்படம்.
இளமையில் அதிகம் பொருள் ஈட்டினால் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழலாம் என்று ஆசையில் தூரதேசம் பயணப்பட்டவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் தாங்கள் இழந்த இளமையை பெறமுடியாது என்பதை வேதனையோடு உணர்த்துவதாய் படக்குழுவினர் காட்டியிருப்பது நிதர்சனம்!
'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்' என்று சொந்த நாட்டின் சுரம் பாடிவிட்டு எண்ணை வளம் உள்ள பல நாட்டின் பாலைவெயிலில் வெந்து தன் சிறகுகளை கருக்கிக்கொண்டதன் நெடி இந்தப்படம் முழுதும் நிறையவே அடிக்கின்றது.
கட்டிடத்தொழில்,தோட்டவேலை, அலுவலக உதவியாளர், தட்சர்பணி மற்றும் சாலைப்பணிகளில் தங்கள் உடலையும் உள்ளதையும் கடுமையாக வருத்திகொண்டு உழைக்கும் நம் தோழர்கள் கூறும் கண்ணீர் கதைகள் நம் சதைகளை குத்திக்கிழித்து இதயத்தை தொடுகின்றன.
இந்த ஆவணப்படத்தை காணும்போது அரபு தேசத்தில் கிடைக்கும் பெட்ரோலை விட இவர்கள் உழைத்து சிந்திய வியர்வைகளே அதிகம் என்று அனைவருக்கும் எண்ணத்தோன்றும்.
தாய்நாட்டில் தன் உறவுகள் யாரும் காண்ணீர் சிந்திவிடக்கூடாது என்பதற்காக இவர்கள் அயல் நாட்டில் இரத்தம் சிந்தவும் தயாரகிவிட்டதற்கான காரணங்களையும் காட்சிகளாக காட்டியிருக்கிறார்கள். வாழ்வியல் சூழலாலும் உளவியல் காரணங்களாலும் இவர்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டு தன் உறவுகளுக்காக இவர்கள் செய்யும் தியாகம் நியாயமாகவேபடுகின்றது.
இந்த ஆவணப்படம் இவர்களின் கண்ணீருக்கு கைக்குட்டை கொடுப்பதை தவிர்த்துவிட்டு கைகொடுத்து மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கு துணைநிற்கிறது.பெரும்பான்மையான வெளிநாடுகளில் 'தொழிலாளர் நலத் துறை' இருந்தாலும் அதன் பயன்பாடு இவர்களுக்கு முறையாக போய்சேருவதில் இருக்கும் வழிதடங்களை சீர்படுத்தி, தான் உழைக்கும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு முழுபலமாய் இருக்கும் இந்த தியாகத்தொழிலாளர்கள் வாழ்க்கை வளம்பெற அவர்கள் மனநிம்மதியோடு வாழ ஆவன செய்யட்டும் இந்த ஆவணப்படம்!
இதுபோன்று பேலும் பலமுற்சிகளை முனைப்புடன் முன்னேடுத்துச் செல்லும் ஸ்கைலைன் மீடியா படக்குழுவினரை மனம்திறந்து பாராட்டலாம்.
-அ.அப்துல் வதூத் துபாய்
அமான் அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 8 ஆம் ஆண்டு விழா
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபாயால் கடந்த 20-2-2015 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு
தேரா துபாய் அல் ரபீ ஹோட்டலில்
அமான் அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின்
8 ஆம் ஆண்டு விழாவும் பொது குழுவும்
சிறப்பாக நடைப்பெற்றது
"அல்ஹம்துலில்லாஹ்"
நற்பணிகளில் ஈடுபடுவதிலும்
நல்ல காரியங்களில் விரைந்து செயல்படும்
தன்னார்வமிக்கவர்கள் நிறைந்த
அடியக்கமங்கலம் சகோதரர்கள் சங்கமித்தார்கள்.
நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமாகின,
முதல் அமர்வு 10;30துவங்கியது
காலை முதல் அமர்வில் அமீரக ஜும்மா குத்பாவின்
தமிழ் மொழி பெயர்ப்பாக ஜும்மா உரை நிகழ்த்தப்பட்டது.
ஜும்மா தொழுகைக்கு பின் அடியற்கை
பரக்கத் கேட்டரிங் தயாரிப்பில்
அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது.
இரண்டாவது அமர்வு:2;30 துவங்கியது
ஜனாப். அனீசுதீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க
இனியகுரலில் ஜனாப். முசாகுதீன் கிராஅத் ஓதிட
ஜனாப். கமாலுதீன் குர்ஆன் தமிழாக்கம் வாசித்தார்.
நிகழ்ச்சிக்கு ஜனாப். பணி அப்தால் அவர்கள்
தலைமை ஏற்று நடத்தினார்கள்.
ஜனாப். சர்புதீன் நானா அவர்கள் வரவேர்புறையற்றினார்கள்.
அடியற்கை மூத்த சகோதரர்கள் முன்னிலை வகித்தார்கள்.
ஹாஜா நிஜாம் அவர்கள்
2014 க்கான வரவு செலவு ஆண்டறிக்கை சமர்பித்தார்கள்
ஜனாப். AI.சேக் தாவூத் அவர்கள்
அமான் பொதுகுழுவின் நோக்கம் என்ற தலைப்பிலும்
ஜனாப். சமீஹுன் மஜீத் அவர்கள்
அமான் வழங்கிய கல்வி என்ற தலைப்பிலும்
ஜனாப். அமீர் சாகுல் அவர்கள்
மருத்துவத்தில் அமான் என்ற தலைப்பிலும்
ஜனாப். ஹாஜா முபாரக் அவர்கள்
அமான் பைத்துல்மாலின் உதவிகள் என்ற தலைப்பிலும்
மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்
ஜனாப். ஹுசைன் பாஷா அவர்கள்
"வெற்றி நமதே" என்ற தலைப்பிலும்,
சிந்தைக்கு விருந்தளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்கள்.
கடல் பறவை
என்ற ஆவன படமும் வெளியிடப்பட்டது.
2015 க்கான அமான் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டது
புதிய நிர்வாகிகள் 2015:
தலைவர் : ஜனாப். சமீஹுன் மஜீத் 0507653805
துணை தலைவர்: ஜனாப். PK சுல்தான் 0507865921
பொதுசெயலாளர் : ஜனாப். ஹாஜா தன்வீர் 0554339304
துணை பொது செயலாளர்கள்
ஜனாப். ஜாகிர் ஹுசைன்
ஜனாப். ஹாஜா சிராஜூதீன் 050 1681833
ஜனாப். ஜெகபர் சாதிக் 0557582836
பொருளாளர் : ஜனாப். ஜபீன் 050 8485672
தணிக்கையாளர்: ஜனாப். கமாலுதீன் 055 7380380
ஆகியோர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
புதிய தலைவரின் நன்றியுரையுடனும் மற்றும் துவாவுடணும்
கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
சிறப்புடன் சமுதாய சேவை செய்திட கருணை மிக்க அல்லாஹ் நல்லுதவி செய்வானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பில் ஆலமீன்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அமான் கூட்டத்தில் கடல் கடந்த பறவைகள்
கடல் கடந்த பறவைகள் ஆவணப்படத்தின் காட்சிகள் 20.02.2015 அன்று துபாயில் நடைபெற்ற அமான் கூட்டத்தில் திரையிடப்பட்டது.
Monday, 23 February 2015
China Home Life Fair
We participated in China Home Life Fair from 25th to 27th November, 2014 at
Dubai World Trade Centre in Dubai - UAE.
Dubai World Trade Centre in Dubai - UAE.
Meeting with Spain delegates
Business Development Meeting held with Spain delegates on 18th & 19th
February, 2015 in Corporate Office, Sharjah.
February, 2015 in Corporate Office, Sharjah.
Subscribe to:
Posts (Atom)