Tuesday, 11 November 2014

அமீர் ஜவஹர் அவர்களுடன் சந்திப்பு

துபாய் வந்துள்ள அன்பர் அமீர் ஜவஹர் அவர்களுடன் 10.11.2014 அன்று நடைபெற்ற மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு

Sunday, 9 November 2014

ஷார்ஜாவில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஷார்ஜா மண்டல தமுமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஷார்ஜா தமுமுக மர்கஸில் 07.11.2014 அன்று அமீரக தமுமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாநில செயலாளர் முனைவர் பேராசிரியர் ஹாஜாகனி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள தற்போதைய சூழல் குறித்தும், இயக்க பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். மேலும் நிர்வாகிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உற்சாகமூட்டினார்.

ஷார்ஜா மற்றும் அஜ்மான் மண்டல நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அமீரக செயற்குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் இக்பால், ஷார்ஜா மண்டலத் தலைவர் அபுல் ஹசன், மண்டலச் செயலாளர் இபுராஹிம், அஜ்மான் மண்டல தலைவர் முத்துப்பேட்டை முகைதீன் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

தமிழ் மீடியா பேரவையின் சிறப்பு கூட்டம்

தமிழ் மீடியா பேரவையின் சிறப்பு கூட்டம் துபாயில் 08.09.2014 அன்று ஒருங்கிணைப்பாளர் கபீர் தலைமையில் நடைபெற்றது.

எழுத்தாளர் அபூஷேக் முஹம்மத் அவர்களின் உலக மக்களின் போர் பாதிப்புகள் மற்றும் ஊடகவியலாளரின் பொறுப்புக்கள் தியாகங்கள் குறித்து செய்திகளை முன் வைத்தார். காட்சி ஊடகத்தின் தாக்கத்தை செயல்முறை பயிற்சியின் வாயிலாக ஹூசைன் பாஷா செய்துகாட்டினார்.

நேர்மையான ஊடகங்களின் அவசியம் குறித்தும் இன்றைய சூழ்நிலைகள் குறித்தும் பேராசியர் ஹாஜாகனி சிறப்புரையாற்றினார்.

தமிழ் மீடியா பேரவை அமீரக ஒருங்கிணப்பாளர் உவைஸ் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்புடன் ஒருங்கிணைத்தார் . அதிகமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வேலை நாட்களிலும் மக்கள் நிகழ்ச்சிக்கு வந்தது அவர்களின் ஆர்வம் மற்றும் பொறுப்புணர்வை காட்டியது .

Saturday, 8 November 2014

துபையில் நடைபெற்ற தமுமுக வின் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம்

துபை மண்டல தமுமுக சார்பில் சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சி 07-11-2014 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு இஷா தொழுகைக்கு பிறகு துபை பனியாஸ் மெட்ரோ பகுதியில் உள்ள லேண்ட்மார்க் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துபை மண்டல தமுமுக தலைவர் சகோதரர் ஏ.எஸ்.இப்ராஹீம் தலைமை தாங்கினார்.துபை மண்டல தமுமுக துணைத் தலைவர் சகோதரர் அப்துல் காதர் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அமீரக தமுமுக அலுவலக செயலாளர் சகோதரர் இஸ்மத் இனூன் மற்றும் துபை மண்டல தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அமீரக தமுமுக துணைத் தலைவர் சகோதரர் ஹூஸைன் பாஷா துவக்கவுரையாற்றினார்.

தமிழகத்திலிருந்து வந்திருக்கும் தமுமுக மாநில செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்கள் "சமுதாய முன்னேற்றத்தில் நமது பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

துபை மண்டல தமுமுகவின் செயல்பாடுகள் பற்றி Projector மூலம் விளக்கி காண்பிக்கப் பட்டது.

இறுதியாக துபை மண்டல தமுமுக செயலாளர் எஸ்.எம்.ஷாகுல் ஹமீது நன்றியுரையாற்றினார்.

துபை,ஷார்ஜா,அஜ்மான்,அபுதாபி, அல் அய்ன் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை துபை மண்டல தமுமுக சகோதரர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.