Monday, 1 December 2014

நன்றி சொல்லும் நேரமிது

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சிலில் 29.11.2014, சனிக்கிழமை அன்று வழக்கறிஞராக பதிவு செய்தேன். எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகவும், அடிப்படை மனித உரிமைகளை மீட்பதற்கும் சட்டம் பெரும் உதவியாக இருக்கும். சட்டத்துறையுடன், மன ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் உளவியல் கல்வியும் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான ஒன்று. பல்வேறுபட்ட உளவியல் பிரச்சனைகள்தான் சட்ட பிரச்சனைகளை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன. உளவியல் மற்றும் சட்டம் ஆகியவற்றை இணைத்து நான் செய்யவேண்டிய ஆய்வுக்கான முதல் கட்டத்தை அடைந்ததாக கருதுகிறேன்.

என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, ஊக்கமளித்து வரும் நண்பர் கீழை ஹசன் அவர்களுக்கும். என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து உற்சாகமளித்துவரும் என் அன்பு மனைவிக்கும், என் வளர்ச்சியில் மகிழ்ச்சியடையும் எனது தாய்க்கும், சகோதரருக்கும், இரத்த உறவுகளுக்கும், மனைவியின் பெற்றோர் தக்கலை மைதீனா-பொறியாளர் முஹம்மது ஹனீபா, வழக்கறிஞர்கள் காஞ்சி ஜைனுலாபுதீன், காஞ்சி வாசு, அம்பத்தூர் வெங்கடேஷ் மற்றும் நண்பர்கள் கிஷோர்குமார், செந்தில் குமார்; உள்ளிட்டோருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.


செய்தியறிந்து வாழ்த்துகள் தெரிவித்த தமுமுக-வின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவருமான முனைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், முன்னாள் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும், தமுமுக மூத்த தலைவருமான செ. ஹைதர் அலி, மாநில தமுமுக மற்றும் மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, தமுமுக மாநில செயலாளர் முனைவர் பேரா. ஹாஜாகனி, அமீரக தமுமுக செயலாளர் யாசின் நூருல்லாஹ், இணையதள நண்பர்கள் அபுஷேக் முஹம்மது, கொள்ளுமேடு ரிபாயி, முத்துப்பேட்டை முகைதீன், தோப்புத்துறை ஆதம் ஆரிபின் உள்ளிட்டோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்பில்,

ஹூசைன் பாஷா

வாழ்த்துகள் அமீரகம்!

தலைநகர் அபுதாபி தொடங்கி, வர்த்தக நகரம் துபாயிலிருந்து, கலாச்சார கோட்டை ஷார்ஜாவிலிருந்து அனைத்து அமீரகங்களும் ஒவ்வொரு சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ளது. பல்லாண்டு காலமாக எங்களுடைய வாழ்வில் மறக்கமுடியாத பல்வேறு நல்ல அனுபவங்களை இந்த அமீரகம் கொடுத்திருக்கின்றது, இன்னும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
குறைகளை பூதக்கண்ணாடி இல்லாமல் பார்த்தால் அமீரகத்தில் வாழும் வாழ்க்கை இன்பகரமானதாகவே இருக்கும். பன்முக கலாச்சாரம், ஊழல் இல்லாத நிர்வாகம், எல்லா விஷயங்களிலும் சர்வதேச தரம், சுத்தமான சுற்றுப்புற சூழ்நிலை, விசாலமான சாலைகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட படைப்புகளில் உலக நாடுகளுக்கு முன்னோடி, வியக்கவைக்கும் சுற்றுலா தளங்கள், வரிச்சுமையில்லாத வணிக நடைமுறைகள், நேர்மையான காவல்துறை, முறையான சட்டம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது அமீரகம்.
ஐக்கிய அரபு அமீரகம் தன்னுடைய தேசிய தினத்தை இன்று (02.12.2014) கொண்டாடும் இந்த வேளையில் அமீரக வாழ் இந்தியனாக இந்த நாட்டின் மேம்பாட்டிற்காக உழைக்கும் அனைத்து தலைவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

அன்பில்,
ஹூசைன் பாஷா

Tuesday, 11 November 2014

அமீர் ஜவஹர் அவர்களுடன் சந்திப்பு

துபாய் வந்துள்ள அன்பர் அமீர் ஜவஹர் அவர்களுடன் 10.11.2014 அன்று நடைபெற்ற மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு

Sunday, 9 November 2014

ஷார்ஜாவில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஷார்ஜா மண்டல தமுமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஷார்ஜா தமுமுக மர்கஸில் 07.11.2014 அன்று அமீரக தமுமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாநில செயலாளர் முனைவர் பேராசிரியர் ஹாஜாகனி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள தற்போதைய சூழல் குறித்தும், இயக்க பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். மேலும் நிர்வாகிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உற்சாகமூட்டினார்.

ஷார்ஜா மற்றும் அஜ்மான் மண்டல நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அமீரக செயற்குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் இக்பால், ஷார்ஜா மண்டலத் தலைவர் அபுல் ஹசன், மண்டலச் செயலாளர் இபுராஹிம், அஜ்மான் மண்டல தலைவர் முத்துப்பேட்டை முகைதீன் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

தமிழ் மீடியா பேரவையின் சிறப்பு கூட்டம்

தமிழ் மீடியா பேரவையின் சிறப்பு கூட்டம் துபாயில் 08.09.2014 அன்று ஒருங்கிணைப்பாளர் கபீர் தலைமையில் நடைபெற்றது.

எழுத்தாளர் அபூஷேக் முஹம்மத் அவர்களின் உலக மக்களின் போர் பாதிப்புகள் மற்றும் ஊடகவியலாளரின் பொறுப்புக்கள் தியாகங்கள் குறித்து செய்திகளை முன் வைத்தார். காட்சி ஊடகத்தின் தாக்கத்தை செயல்முறை பயிற்சியின் வாயிலாக ஹூசைன் பாஷா செய்துகாட்டினார்.

நேர்மையான ஊடகங்களின் அவசியம் குறித்தும் இன்றைய சூழ்நிலைகள் குறித்தும் பேராசியர் ஹாஜாகனி சிறப்புரையாற்றினார்.

தமிழ் மீடியா பேரவை அமீரக ஒருங்கிணப்பாளர் உவைஸ் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்புடன் ஒருங்கிணைத்தார் . அதிகமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வேலை நாட்களிலும் மக்கள் நிகழ்ச்சிக்கு வந்தது அவர்களின் ஆர்வம் மற்றும் பொறுப்புணர்வை காட்டியது .

Saturday, 8 November 2014

துபையில் நடைபெற்ற தமுமுக வின் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம்

துபை மண்டல தமுமுக சார்பில் சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சி 07-11-2014 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு இஷா தொழுகைக்கு பிறகு துபை பனியாஸ் மெட்ரோ பகுதியில் உள்ள லேண்ட்மார்க் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துபை மண்டல தமுமுக தலைவர் சகோதரர் ஏ.எஸ்.இப்ராஹீம் தலைமை தாங்கினார்.துபை மண்டல தமுமுக துணைத் தலைவர் சகோதரர் அப்துல் காதர் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அமீரக தமுமுக அலுவலக செயலாளர் சகோதரர் இஸ்மத் இனூன் மற்றும் துபை மண்டல தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அமீரக தமுமுக துணைத் தலைவர் சகோதரர் ஹூஸைன் பாஷா துவக்கவுரையாற்றினார்.

தமிழகத்திலிருந்து வந்திருக்கும் தமுமுக மாநில செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்கள் "சமுதாய முன்னேற்றத்தில் நமது பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

துபை மண்டல தமுமுகவின் செயல்பாடுகள் பற்றி Projector மூலம் விளக்கி காண்பிக்கப் பட்டது.

இறுதியாக துபை மண்டல தமுமுக செயலாளர் எஸ்.எம்.ஷாகுல் ஹமீது நன்றியுரையாற்றினார்.

துபை,ஷார்ஜா,அஜ்மான்,அபுதாபி, அல் அய்ன் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை துபை மண்டல தமுமுக சகோதரர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Monday, 27 October 2014

அமீரக தமுமுக செயற்குழு

அமீரக தமுமுக செயற்குழு கூட்டம் 24-10-2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அல் அய்ன் மண்டல தமுமுக மர்கஸில் நடைபெற்றது.

அமீரக தமுமுக செயலாளர் சகோதரர் யாசீன் நூருல்லா தலைமை தாங்கினார். அல் அய்ன் மண்டல தமுமுக தாஃவா பணிக்குழு உறுப்பினர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி திருக்குர்ஆன் வசனங்கள் ஓதினார்.

அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். அமீரக தமுமுக துணைத் தலைவர் சகோதரர் ஹூஸைன் பாஷா அவர்கள் அமர்வை நெறிப்படுத்தினார்.

கடந்த கால செயல்பாடுகள் பற்றி மீளாய்வும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் செய்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இந்த செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தை சேர்ந்த பொருளாதார ஆலோசகர் திருவாரூர் பிரோஸ் ஷா அவர்கள் கலந்து கொண்டு தொழில்துறையில் ஹலால் முதலீடுகள் பற்றி உரையாற்றி இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த அமர்வில் அல் அய்ன், துபை, அஜ்மான் மண்டலங்களின் தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த அமர்வுக்கான ஏற்பாடுகளை அல் அய்ன் மண்டல தமுமுக நிர்வாகம் செய்திருந்தது.

Friday, 17 October 2014

3rd Quarter Meeting -2014

National Elevators' 3rd Quarter Meeting held in Al Ain on 17.10.2014.

Friday, 3 October 2014

Eid Mubarak

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!
 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
 அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
 அன்பில்,
 ஹூசைன் பாஷா

Tuesday, 16 September 2014

Workshop on 'Premarital, marital and family counselling'

Salem Periyar University, Department of Psychology organized a 3 day
workshop from 20.08.2014 to 22.08.2014 on 'Premarital, marital and family
counselling'. Workshop conducted by John Antony, founder and director, The
Fountain, Vidivelli, Krishnagiri.