Saturday, 24 November 2012
Monday, 19 November 2012
Sunday, 11 November 2012
துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு கண்டனம்
முஸ்லிம் பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கண்டன அறிக்கை.
அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,
பொருள் : செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி
தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!
09.11.2012, வெள்ளிக் கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு தங்களது ரேடியோ ஹலோ 89.5 அலைவரிசையில் ஒலிபரப்பான தலைப்புச் செய்திகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கவேண்டும் என இராமகோபாலன் தெரிவித்தார் என ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ஒரு மதத்திற்கும், மதத்தினருக்கும் பொதுவானது அல்ல என்று வலியுறுத்தப்பட்டதால் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சன் டிவி போன்ற ஊடகங்களே தவிர்த்தவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களின் குணாதிசியங்களையும், பண்புகளையும் அதிகமாக புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள நாட்டில் அமர்ந்துக் கொண்டு செய்தியின் தரம் அறியாமல் வாசிப்பது தவறு என ரேடியோ ஹலோ உணரவேண்டும்.
மதக் கலவரங்களை ஏற்படுத்தி, அமைதி குலைப்பதை தனது வாழ்நாள் இலட்சியமாக கருதும் இராமகோபாலனின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் கூறிய உண்மையற்ற கூற்றை செய்தியாக வாசிப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்திருக்க வேண்டாமா?. ஒரு சில நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளும், பல்வேறு மறைமுக கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் வழங்கும் தங்கள் ரேடியோ இதுபோன்ற நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
இந்த நாட்டினுடைய சட்டத்தின் படி இஸ்லாமிய மதத்தைப்பற்றியோ, தலைவர்களைப் பற்றியோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்ப்பது, கருத்து தெரிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளை செய்ததற்காக பல செய்தித் தாள்களும், காட்சி ஊடகங்களும் கடந்த காலங்களில் உடனடியாக மூடப்பட்டுள்ளன என்பதை மேற்கோள் காட்டி, தங்களுடைய இன்றைய செய்தி வாசிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், இனி செய்திகளில் கவனம் செலுத்துப்படும் என்ற உறுதி மொழியையும் இந்த மின்னஞ்சல் கிடைத்த 7 வேலை நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக இந்த விஷயத்தை அணுகுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதை இதன் மூலமாக பதிவு செய்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
ஹூசைன் பாஷா
துபாய்
நாள் : 09.11.2012
துபாய் தமிழ் வானொலி நிலையத்திலிருந்து கிடைத்த பதில் :
திரு. ஹூசைன் பாஷா
துபாய்
மதிப்பிற்குரிய திரு. ஹூசைன் பாஷா அவர்களுக்கு>
செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி அனுப்பப்பட்ட தங்களது கடிதம் கண்டோம். தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியில் தவறுதலாக வார்த்தை பிரேயாகம் செய்யப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக எங்களது செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தீர்களானால் இஸ்லாமிய மதம் குறித்தோ> இஸ்லாமிய சகோதரர்கள் குறித்தோ சிறப்பான செய்திகளையே நாங்கள் அளித்து வந்திருப்பதை அறிந்திருப்பீர்கள். தவிர மதம்>மொழி> இனம் குறித்து எந்த தவறான செய்திகளும் வெளியாகி விடக்கூடாது என்பது குறித்தும் நாங்கள் தொடர்ந்து கவனமாகவே இருந்து வருகிறோம். மேலும்> எங்களது செய்திப் பிரிவின் அனைத்து ஊழியர்களுக்கும் இதுகுறித்து முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகம் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறே அன்றி> எந்தவித உள்நோக்கத்தினாலும் வாசிக்கப்பட்டதல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும்> இதுபோன்ற தவறுகள் நேராவண்ணம் கூடுதல் கவனம் செலுத்தவும் உறுதி ஏற்கிறோம். எங்களது கவனத்துக்கு இதை உடனடியாக கொண்டு வந்தமைக்கு தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்
செய்தி ஆசிரியர்
ரேடியோ ஹலோ 89.5
நாள் : 11-11-2012
Subscribe to:
Posts (Atom)