Sunday, 23 December 2012

உற்சாகமூட்டிய தன்னம்பிக்கை மேம்பாட்டு பயிற்சி முகாம்

வாழ்க்கையில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை விளக்கும் பயிற்சி முகாம் 21.12.2012, வெள்ளிக் கிழமை அன்று துபாய் மண்டல தமுமுக அலுவலகத்தில் அமீரக தமுமுக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா தலைமையில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது திருக்குர் ஆன் ஓதி, வரவேற்புரை ஆற்றினார்.

ஆக்கப்பூர்வமான எண்ணங்களைத் தாங்கி பயணித்தால் தன்னம்பிக்கையை மேம்படுத்தலாம் என்பதை எளிய முறை பயிற்சிகள் மூலம் பயிற்சியாளர் க.ரா. திருநாவுக்கரசு அவர்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். நிகழ்ச்சி ஒருங்கணிப்பாளர்களுக்கு மண்டலச் செயலாளர் மதுக்கூர் சிராஜ் நினைவுப் பரிசு வழங்கினார்.

மண்டல துணைத் தலைவர் அப்துல் காதர் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பல சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.

Saturday, 22 December 2012

Annual Business Development Meeting - 2012

Annual Business Development Meeting of National Elevators Group was held on 20.12.2012

Saturday, 8 December 2012

ஷார்ஜாவில் சிறப்புடன் நடைபெற்ற பெண்களுக்கான நேரமேலாண்மை நிகழ்ச்சி

பெண்களுக்கான நேர மேலாண்மை நிகழ்ச்சி 07.12.2012, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை வகித்த பெண் பொறியாளர் ஜம்ரத் ஜாஹீர் அவர்கள் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும், இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மக்கள் மத்தியில் ஏற்பட்ட மன மாற்றங்கள் குறித்தும் விளக்கினார்.

Thursday, 6 December 2012

Saturday, 24 November 2012

அபுதாபியில் நடைபெற்ற நேர மேலாண்மை நிகழ்ச்சி

23.11.2012 அன்று அபுதாபியில் நடைபெற்ற நேர மேலாண்மை நிகழ்ச்சி

Sunday, 11 November 2012

துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு கண்டனம்

முஸ்லிம் பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கண்டன அறிக்கை.

அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,

பொருள் : செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி

தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!

09.11.2012, வெள்ளிக் கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு தங்களது ரேடியோ ஹலோ 89.5 அலைவரிசையில் ஒலிபரப்பான தலைப்புச் செய்திகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கவேண்டும் என இராமகோபாலன் தெரிவித்தார் என ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ஒரு மதத்திற்கும், மதத்தினருக்கும் பொதுவானது அல்ல என்று வலியுறுத்தப்பட்டதால் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சன் டிவி போன்ற ஊடகங்களே தவிர்த்தவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களின் குணாதிசியங்களையும், பண்புகளையும் அதிகமாக புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள நாட்டில் அமர்ந்துக் கொண்டு செய்தியின் தரம் அறியாமல் வாசிப்பது தவறு என ரேடியோ ஹலோ உணரவேண்டும்.

மதக் கலவரங்களை ஏற்படுத்தி, அமைதி குலைப்பதை தனது வாழ்நாள் இலட்சியமாக கருதும்  இராமகோபாலனின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் கூறிய உண்மையற்ற கூற்றை செய்தியாக வாசிப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்திருக்க வேண்டாமா?. ஒரு சில நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளும், பல்வேறு மறைமுக கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் வழங்கும் தங்கள் ரேடியோ இதுபோன்ற நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

இந்த நாட்டினுடைய சட்டத்தின் படி இஸ்லாமிய மதத்தைப்பற்றியோ, தலைவர்களைப் பற்றியோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்ப்பது, கருத்து தெரிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளை செய்ததற்காக பல செய்தித் தாள்களும், காட்சி ஊடகங்களும் கடந்த காலங்களில்  உடனடியாக மூடப்பட்டுள்ளன என்பதை மேற்கோள் காட்டி, தங்களுடைய இன்றைய செய்தி வாசிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், இனி செய்திகளில் கவனம் செலுத்துப்படும் என்ற உறுதி மொழியையும் இந்த மின்னஞ்சல் கிடைத்த 7 வேலை நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக இந்த விஷயத்தை அணுகுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதை இதன் மூலமாக பதிவு செய்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
ஹூசைன் பாஷா
துபாய்
நாள் : 09.11.2012


துபாய் தமிழ் வானொலி நிலையத்திலிருந்து கிடைத்த பதில் :

திரு. ஹூசைன் பாஷா
துபாய்

மதிப்பிற்குரிய திரு. ஹூசைன் பாஷா அவர்களுக்கு>

செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி அனுப்பப்பட்ட தங்களது கடிதம் கண்டோம். தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியில் தவறுதலாக வார்த்தை பிரேயாகம் செய்யப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக எங்களது செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தீர்களானால் இஸ்லாமிய மதம் குறித்தோ>  இஸ்லாமிய சகோதரர்கள் குறித்தோ சிறப்பான செய்திகளையே நாங்கள் அளித்து வந்திருப்பதை அறிந்திருப்பீர்கள். தவிர மதம்>மொழி> இனம் குறித்து எந்த தவறான செய்திகளும் வெளியாகி விடக்கூடாது என்பது குறித்தும் நாங்கள் தொடர்ந்து கவனமாகவே இருந்து வருகிறோம். மேலும்>  எங்களது செய்திப் பிரிவின் அனைத்து ஊழியர்களுக்கும் இதுகுறித்து முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகம் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறே அன்றி> எந்தவித உள்நோக்கத்தினாலும் வாசிக்கப்பட்டதல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக்  கொள்கிறோம் . மேலும்> இதுபோன்ற தவறுகள் நேராவண்ணம் கூடுதல் கவனம் செலுத்தவும் உறுதி ஏற்கிறோம். எங்களது கவனத்துக்கு இதை உடனடியாக கொண்டு வந்தமைக்கு தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்
செய்தி ஆசிரியர்
ரேடியோ ஹலோ 89.5
நாள் : 11-11-2012

Sunday, 28 October 2012

துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அமீரகத் துணைத் தலைவர் ஹூசைன் பாஷா நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்தை எடுத்துரைத்தார்.

 

சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள், முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு திருக் குர்ஆன், நபிமார்களின் வாழ்க்கை, வரலாற்று குறிப்புகள், பைபிள், இந்துக்களின் வேத நூல்களிலிருந்து பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனையடுத்து, முஸ்லிம்களும் ஒரு சில விஷயங்களைக் குறித்து விளக்கங்கள் கேட்டு தெளிவுபெற்றனர்புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொறியாளர் முஹம்மது அவர்கள் தன்னுடைய மன மாறுதலுக்கான காரணத்தையும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்தும் பேசினார்.

 

சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ரியாத் மண்டல தமுமுக துணைப் பொதுச் செயலாளர் நூர் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை குறித்து பாராட்டினார். நல்ல நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். கலந்துக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்கள், குறுந்தகடுகள், இரவு உணவு வழங்கப்பட்டன. துபாய் மண்டல தமுமுக சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை மண்டலச் செயலாளர் மதுக்கூர் சிராஜ் தலைமையிலான குழுவினர்கள் வி.களத்தூர் உமர் பாருக், ஹைதர் நசீர், மன்சூர், முஜிப் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Thursday, 25 October 2012

Eid Greetings!

Assalamu Alaikkum.

May the blessings of Allah fill your life with happiness and open all the doors of success now and always.

Eid Mubarak

Luv,

Hussain Basha

 

Monday, 22 October 2012

துபாயில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் அக்டோபர் 27-ம் தேதி மாலை 06.30க்கு சமூக நல்லிணக்க நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களைக் குறித்தும் உள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டுத்தெரிந்துக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.  

 

சவுதி அரேபியா நாட்டிலிருந்து வருகைப் புரியும் அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இறைவேதம், இறைத்தூதர் வாழ்வில் உள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பதிலளிப்பார்.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள விரும்புகிறவர்கள் 055-5188249, 050-9431980, 050-5959697 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம். துபாய் மண்டல தமுமுக சார்பாக, இந்நிகழ்ச்சியை மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமையிலான குழுவினர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Saturday, 20 October 2012

டாக்டர் சலாஹூதீன் அவர்களின் கவிதை

 

தற்கொலை தீர்வாகுமா?

தொடரும் தற்கொலைகள்..தீர்வு என்ன?

-              ஹூசைன் பாஷா, துபாய்

 

கடந்த வாரம் நிகழ்ந்த இரண்டு தற்கொலைகள் நம் கவனத்தை ஈர்த்து நம்மை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. முதலாவதாக, நெல்லையைச் சேர்ந்த ஆஷிக் என்ற பல் மருத்துவர் மன உலைச்சல் காரணமாக தன்னைத் தானே கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் தற்கொலை செய்துக் கொண்டார்இரண்டாவது, நாமக்கல்லைச் சேர்ந்த பஷீர் அஹமது என்ற பெரியவர் தன்னுடைய குடும்பத்தினர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளாததால் மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்துள்ளார்.

 

இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து, அமீரகத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் ஒரு குடும்ப பெண் தாயகத்திலிருக்கும் தன் சகோதரர் மூலமாக தொடர்புகொண்டு உடனடியாக என்னுடைய கொடுமைக்கார கணவனிடமிருந்து மீட்டு என்னையும், குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பிவையுங்கள், இல்லையென்றால் தற்கொலையைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளதைப் பார்த்தால் மக்கள் மத்தியில் பிரச்சனைக்கு தீர்வு தற்கொலைதான் என்று பரவலாக பதிந்துள்ளதை காண முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை சட்ட ரீதியாக மீட்டு தாயகத்திற்கு அனுப்புதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம்.

 

தற்கொலைகளையும், அவற்றிற்கான உணர்வுகள் மேலோங்காமல் தடுப்பதற்கான வழி முறைகள் என்னவென்பதையும் ஆராய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் அளவிற்கு கொடூரமான இந்த செயலைக் குறித்து, ''உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்' என திருக்குர்ஆன் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றது. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாத நிலைதான் வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது.

 

உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடியாக தீர்வு வேண்டி மருத்துவரை அணுகக் கூடிய நாம், மன ரீதியான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அதை கண்டறிந்து அதற்கான தீர்வை எடுப்பது நம் கடமை.35 கோடிக்கும் அதிகமானோர்  உலக அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அக்டோபர் 10-ம் தேதி நடந்த உலக மன நல ஆரோக்கிய தினத்தில் தெரிவித்துள்ளது.

தொடக்க நிலையில் உள்ள பிரச்சனைகளுக்கு மன நல ஆலோசகரிடம் சென்றால் கவுன்சிலிங் மூலம் பிரச்சனையை தீர்க்கலாம். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது என்பது மறுக்கமுடியாத உண்மை. சற்றே தீவிரமாகியுள்ள மன பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரைகளுடன் கூடிய ஆலோசனை தேவைப்படலாம். நமது சமூகத்தில் இத்துறையில் நிபுணர்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.

 

குடும்பத்தினரால் கைவிடப் பட்டவர்களுக்கு மன ரீதியான ஆறுதலுடன் சேர்த்து பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை அளித்து அவர்கள் நம்பிக்கையுடன் உலகில் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிகமான தற்கொலைகள் குடும்பப் பிரச்சனைகள் காரணமாகத்தான் ஏற்படுகின்றன. கணவன், மனைவியிடையே பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, ஒருவொரை மற்றொருவர் புரிந்துக் கொள்ளாமை போன்றவையே முதற்காரணங்களாக இருக்கின்றன.

 

இதுபோன்ற தற்கொலைகளைத் தடுக்க சமூக இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துவற்கு உடனடியாக அனைத்து பகுதிகளிலும் ஏற்பாடு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.